மீண்டும் சட்டசபைக்கு வந்தார் ஜெ.
சென்னை:
கடந்த 3 நாட்களாக சட்டசபைக்கு வராமல் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை)மீண்டும் சட்டசபைக்கு வந்தார்.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா தொடர்ந்து பதவியில் நீடிப்பது சட்டத்திற்கு புறம்பானதுஎன்று வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.
அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகளும், ஜெயலலிதாவுக்கு எதிராக பல கேள்விக் கணைகளை விடுத்துள்ளனர்.
"மக்கள் தீர்ப்பின் அடிப்படையில்தான் முதல்வராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டார் என்றால், சட்டங்கள் எல்லாம்எதற்கு? இப்படியே போனால், எதிர்காலத்தில் கொலைக் குற்றவாளி கூட முதல்வராகவோ மந்திரியாகவோஆகலாமா?" என்பது போன்ற கடுமையான கேள்விகளை நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து ஜெயலலிதா தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.இப்போதே ராஜினாமா செய்துவிட்டால், அவருக்கும் நல்லது; தமிழகத்துக்கும் நல்லது என்று அவருக்குஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.
அவற்றை ஆமோதிக்கும் விதமாக, மதிமுகவின் வைகோ உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும், ஜெயலலிதா ராஜினாமாசெய்ய வேண்டும் என்று கோரி வருகின்றன. அவரும் தற்போது ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துவிட்டதாகக்கூறப்படுகிறது.
ஆனால், அதிமுக வட்டாரத்திலும் இதுகுறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சட்டசபைக்கு வராமல் இருந்த முதல்வர் இன்று மீண்டும் சட்டசபைக்கு வந்தார்.அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் வெளியே வந்த ஜெயலலிதாவை செய்தியாளர்கள் பேட்டி கேட்க அணுகியபோது அவர் பதிலளிக்கமறுத்து விட்டுச் சென்று விட்டார்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications