மீண்டும் சட்டசபைக்கு வந்தார் ஜெ.
சென்னை:
கடந்த 3 நாட்களாக சட்டசபைக்கு வராமல் இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (வெள்ளிக்கிழமை)மீண்டும் சட்டசபைக்கு வந்தார்.
ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற ஜெயலலிதா தொடர்ந்து பதவியில் நீடிப்பது சட்டத்திற்கு புறம்பானதுஎன்று வழக்கறிஞர்கள் வாதாடி வருகின்றனர்.
அரசியல் சாசன பெஞ்ச் நீதிபதிகளும், ஜெயலலிதாவுக்கு எதிராக பல கேள்விக் கணைகளை விடுத்துள்ளனர்.
"மக்கள் தீர்ப்பின் அடிப்படையில்தான் முதல்வராக ஜெயலலிதா நியமிக்கப்பட்டார் என்றால், சட்டங்கள் எல்லாம்எதற்கு? இப்படியே போனால், எதிர்காலத்தில் கொலைக் குற்றவாளி கூட முதல்வராகவோ மந்திரியாகவோஆகலாமா?" என்பது போன்ற கடுமையான கேள்விகளை நீதிபதிகள் கேட்டுள்ளனர்.
இதைத் தொடர்ந்து, சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து ஜெயலலிதா தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.இப்போதே ராஜினாமா செய்துவிட்டால், அவருக்கும் நல்லது; தமிழகத்துக்கும் நல்லது என்று அவருக்குஆலோசனைகள் கூறப்பட்டுள்ளன.
அவற்றை ஆமோதிக்கும் விதமாக, மதிமுகவின் வைகோ உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகளும், ஜெயலலிதா ராஜினாமாசெய்ய வேண்டும் என்று கோரி வருகின்றன. அவரும் தற்போது ராஜினாமா செய்யும் முடிவுக்கு வந்துவிட்டதாகக்கூறப்படுகிறது.
ஆனால், அதிமுக வட்டாரத்திலும் இதுகுறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. கடந்த 2 நாட்களுக்கு முன்நடைபெறவிருந்த தமிழக அமைச்சரவைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக சட்டசபைக்கு வராமல் இருந்த முதல்வர் இன்று மீண்டும் சட்டசபைக்கு வந்தார்.அவை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
பின்னர் வெளியே வந்த ஜெயலலிதாவை செய்தியாளர்கள் பேட்டி கேட்க அணுகியபோது அவர் பதிலளிக்கமறுத்து விட்டுச் சென்று விட்டார்.












Click it and Unblock the Notifications