ஈவ் டீசிங்கைத் தடுக்க புதிய சட்டம் வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஈவ் டீசிங்கை தடுக்க புதிய சட்டம் போடப்படும் என்றும், ஈவ் டீசிங்கில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையானநடவடிக்கை எடுக்கப்படும் என்றம் சட்டசபையில் சமூக நலத்துறை அமைச்சர் பா. வளர்மதி கூறினார்.

இது குறித்து சட்டசபையில் கொண்டுவரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து அமைச்சர் கூறியதாவது:

ஈவ் டீசிங்கை தடுக்க புதிய சட்டம் போடப்படும். ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இக்குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது ஜாமீனில் வெளிவராத வகையில் வழக்கு தொடர வழி வகை செய்யப்படும்.

செப்டம்பர் மாதம் வரை 445 பாலியல் பலாத்கார வழக்களும், பெண்களை கடத்தியதாக 774 வழக்குகளும்,வரதட்சனை கொடுமை சம்பந்தமாக 146 வழக்குகளும், ஆபாச வார்த்தைகளை பயன்படுத்தியதாக 2,242வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான இது போன்ற அவலங்கள் நடப்பதற்கு காரணம், மகளிர் காவல் நிலையங்கள்சரிவர செயல்படாததுதான். மகளிர் காவல் நிலையங்கள் இனி சரிவர இயங்கச் செய்யப்படும்.

மேலும், இன்டர் நெட், ஆபாச சினிமாக்கள் மற்றும் சினிமா சுவரொட்டிகள் போன்றவை மூலமாகவும்இளைஞர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். இவற்றுக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

கன்னியாகுமரியில் ஈவ் டீசிங் கொடுமை காரணமாகத் தற்கொலை செய்து கொண்ட அமுதா சம்பந்தப்பட்டவழக்கில், இது வரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார் அமைச்சர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+