ஓரிரு நாட்களுக்குத்தான் மேட்டூர் அணை நீர்
மேட்டூர்:
மேட்டூர் அணையில் தற்போது இருக்கும் தண்ணீரை, இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே பாசனத்திற்காகப்பயன்படுத்த முடியும்.
இதனால், காவிரி டெல்டா பகுதிகளில், லட்சக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள குறுவைப் பயிர்கள் கறுகிப்போகவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
குறுவைச் சாகுபடியைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய சம்பா நடவும், தண்ணீர் பற்றாக்குறையால்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் விவசாயிகள் கடும் வேதனையும் அதிருப்தியும் அடைந்துள்ளனர். கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர்திறந்துவிடவில்லை என்றால், விளைநிலங்கள் எல்லாம் கருகி, நிறைய நஷ்டம் ஏற்படும்.
"மத்திய-மாநில அரசுகள் இதற்குப் பொறுப்பேற்று, கோடிக்கணக்கான ரூபாய் நஷ்ட ஈடு தரவேண்டி வரும்" என்றுவிவசாயிகள் சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
இந்நிலையில், காவிரியிலிருந்து தண்ணீரைத் திறந்துவிட கர்நாடக அரசிடம் வலியுறுத்த வேண்டும் என்று கோரி,தமிழக அனைத்துக் கட்சிக் குழு திங்கள்கிழமை மாலை பிரதமர் வாஜ்பாயைச் சந்திக்கவுள்ளது.