விஷச் சாராயம்: இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.25,000 ஜெ. நிதியுதவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை-அம்பத்தூர் அருகே விஷச் சாராயம் குடித்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரணநிதியிலிருந்து, தலா ரூ.25,000 நிதியுதவி வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அம்பத்தூரில் மெத்தனால் என்ற கெமிக்கல் கலந்த விஷச் சாராயத்தைக் குடித்ததில்,இதுவரை 13 பேர் பரிதாபமாக இறந்து போனார்கள். மேலும் பலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இந்நிலையில், விஷ சாராயம் குடித்து இறந்து போன 13 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.25,000 முதல்வர்நிவாரண நிதியிலிருந்து உதவித் தொகையாக வழங்க ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். மேலும், இச்சம்பவத்தால்கண்பார்வை இழந்துள்ள 4 பேருக்கு தலா ரூ.10,000 உதவித் தொகையாக வழங்குமாறும் முதல்வர்உத்தரவிட்டுள்ளார்.

விஷச் சாராய சம்பவம் தன்னை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாகவும், இந்தச் சம்பவம் தனக்கு மிகவும்வருத்தத்தை அளித்திருப்பதாகவும் முதல்வர் கூறியுள்ளார். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களுக்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறும் அவர் மருத்துவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், விஷ சாராயம் குடித்து இறந்தவர்கள், கண் பார்வை பாதிக்கப்பட்டவர்கள்ஆகியோருக்கு நிவாரணமாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து மொத்தம் ரூ.3,65,000 வழங்கப்பட்டுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+