அமெரிக்காவை வட்டமிடும் போர் விமானங்கள்
டொரான்டோ:
அமெரிக்காவின் உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலையடுத்து, வேறு ஏதேனும் தாக்குதல்நடத்தப்பட்டால் அதை முறியடிக்க நூற்றுக்கணக்கான போர் விமானங்கள் அந் நாட்டின் வானில்வட்டமிட்டவண்ணம் உள்ளன.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்லும் அனைத்து விமானங்களு;ம நிறுத்தப்பட்டுள்ளன.
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்ல வேண்டிய விமானங்கள் அனைத்தும் நாளை தான் செல்லும் என்றுகூறப்படுகிறது.
நடு வானில் பறந்துகொண்டிருக்கும் சில விமானங்கள் அவை கிளம்பிய இடத்துக்கே திருப்பிஅனுப்பப்பட்டுள்ளன. கனடா நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான பிசன் ஏர்போர்ட் நிர்வாக அதிகாரிகள்,மொத்த விமான நிலையத்தையே மூடுவது குறித்து தீவிர ஆலோசனையில் இருக்கிறார்கள்.
நாட்டின் முக்கிய நுழைவு வாயில்களில் வெடிகுண்டு ஆபத்து இருக்கலாம் என்று அஞ்சப்பட்டு, முன்னெச்சரிக்கைநடவடிக்கைகள் தீவிரப் படுத்தட்பட்டுள்ளன. ராணுவமும் உஷார்படுத்தப்பபட்டுள்ளது.












Click it and Unblock the Notifications