For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜெ. வீட்டருகே தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் முதல்வர் ஜெயலலிதா வீட்டின் அருகே தீக்குளித்த மதுரையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் நேற்று(திங்கள்கிழமை) மரணமடைந்தார்.

மதுரை-ஆலங்குளம் மாணகிரியைச் சேர்ந்த அதிமுக தொண்டர் பாண்டியன்.

இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனக்கு வீடு கட்ட கடன் உதவி கேட்டு ஜெயலலிதாவிடம் மனு கொடுக்கவந்திருந்தார். ஆனால், ஜெயலலிதாவைப் பார்க்க விடாமல் காவலர்கள் தடுத்து விட்டனர்.

இதனால் விரக்தியடைந்த பாண்டியன், ஜெயலலிதாவின் வீடு அருகே தீக்குளித்தார். அப்போது அவருடன் இருந்தஅவரது மனைவி மற்றும் குழந்தைகள் அவரை ராணிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

இதுபற்றிய செய்தி அறிந்ததும், பாண்டியனுக்கு தீவிர சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களுக்கு முதல்வர்உத்தரவிட்டார். இவர் நடு ரோட்டில் தீக்குளிக்கும் போது அதைத் தடுக்கத் தவறிய 4 போலீசாரும் சஸ்பெண்டுசெய்யப்பட்டனர்.

மேலும் பாண்டியன் கேட்ட வீடு கட்ட கடன் உதவியை அவருக்கு வழங்குவது தொடர்பாக உரிய நடவடிக்கைஎடுக்கும்படி மதுரை மாவட்டக் கலெக்டருக்கு உத்தரவிட்ட ஜெயலலிதா, பாண்டியனுக்கு ரூ.10,000 உதவித்தொகை அளிக்கவும் உத்தரவிட்டார்.

இந்நிலையில் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வந்த பாண்டியன் நேற்று (திங்கள்கிழமை) மாலைமரணமடைந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X