ஒசாமா பின் லேடன் கைவரிசையா?
நியூயார்க்:
தீவிரவாதிகள் நடத்திய இந்த திடீர் விமானத் தாக்குதலால் அமெரிக்கா அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளது.
இந்தத் தாக்குதலை நாங்கள் நடத்தவில்லை என பாலஸ்தீனிய தீவிரவாத அமைப்புகள் கூறிவிட்டன.
இத் தாக்குதலை சர்வதேச தீவிரவாதியான ஒசாமா பின் லேடன் தான் நடத்தியிருக்க வேண்டும் எனநம்பப்படுகிறது.
ஆப்கானிஸ்தானில் இருந்து இயங்கி வரும் ஒசாமா பின்லேடன் அமெரிக்காவின் நம்பர் ஒன் எதிரி என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே அமெரிக்காவில் ஒக்லஹாமாவில் குண்டு வெடிப்புகளை நடத்தியுள்ளான் ஒசாமா. மேலும்ஆப்பிரிக்காவில் உள்ள அமெரிக்காவின் தூதரகங்களை தகர்த்து நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களைஒசாமாவின் ஆட்கள் கொன்றுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்காவும் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ளஒசாமாவின் பயிற்சி மையங்கள் மீது ஏவுகணைத் தாக்குதலை அமெரிக்கா நடத்தியது.