தங்கத்தின் விலை கிடுகிடு உயர்வு
மும்பை:
ஆப்கானிஸ்தானை அமெரிக்கா தாக்கினால் உலக அளவில் தங்கத்தின் ஏற்றுமதிஇறக்குமதி பாதிக்கப்படும் என்பதால் சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்துவருகிறது.
இந்தியாவிலும் தங்க, வெள்ளிப் பொருட்களை வாங்குபவர்களின் எண்ணிக்கையும்சில நாட்களில் பல மடங்கு அதிகரித்துள்ளது.
இந்தியாவில் இன்று (சனிக்கிழமை) 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 4,725. இது இந்தஆண்டின் அதிக பட்ச விலையாகும். சிறிது நேரத்தில் விலை ரூ 4.710 ஆகக்குறைந்தது.
வெள்ளிக்கிழமை விலையை ஒப்பிட்டு பார்க்கும் போது இது ரூ.10 அதிகம் ஆகும்ஏனென்றால் வெள்ளிக்கிழமை 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 4, 700 தான்.
சனிக்கிழமை காலை 10 தோலா தங்க கட்டியின் விலை ரூ 55,400 என்று இருந்தது.இதுவும் விற்பனை துவங்கிய சில மணி நேரத்தில் ரூ 55,200 ஆகக் குறைந்தது.ஆனாலும், இது வெள்ளிக்கிழமை விலையை விட ரூ 200 கூடுதலாகும்.
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகமாகி வருவது தங்கதிற்கு சந்தையில்ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாட்டையே காட்டுகிறது. தங்கம் விற்பனையில்ஈடுப்பட்டுள்ளவர்களும் சந்தைக்கு தங்கம் வரும் அளவும் குறைந்து வருவதாகக்கூறுகின்றனர்.
தங்கத்தின் விலை கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தான் அச்சம் தரும் விதமாக மிகஅதிகமாக உயர்ந்தது. அதன் பின் தங்கத்தின் விலை அதிகமாக உயரவில்லை.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 4,825 என்று உயர்ந்துமக்களை தங்கத்தின் அருகில் நெருங்க விடாமல் அச்சுறுத்தியது. அதன் பிறகுஇப்போது 10 கிராம் தங்கத்தின் விலை ரூ 4,725யை எட்டியுள்ளது.
லண்டனிலும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. 1 அவுன்ஸ் தங்கத்தின் விலைவியாழக்கிழமை 280.00 அமெரிக்க டாலர் என்று இருந்தது. இது உயர்ந்துவெள்ளிக்கிழமை 256.30 அமெரிக்க டாலரானது.
ஹாங்காங்கில் 1 அவுன்ஸ் தங்கத்தின் விலை 284.50 அமெரிக்க டாலர் ஆகஉயர்ந்துள்ளது.
இந்தியாவில் வெள்ளியின் விலையும் மிகவும் உயர்ந்துள்ளது. சனிக்கிழமை 1 கிலோவெள்ளியின் விலை ரூ 7,355 என்று இருந்தது. வெள்ளி வரும் அளவும் குறைந்துவருவதால் அதன் விலை ரூ 7,370 என்று உயர்ந்துள்ளது. இது முன்பு இருந்த விலையைவிட ரூ 85 அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.