அமைதியானது இந்திய-பாக் எல்லை
ஜம்மூ:
தினமும் காலை எழுந்தவுடன் காபி குடிப்பது போல இந்திய எல்லையை நோக்கி துப்பாக்கி, பீரங்கிகளால் சுடும்பாகிஸ்தானின் ராணுவம் கடந்த 2 நாட்களாக அமைதியில் உறைந்துபோய் உள்ளது.
தீவிரவாதிகளை ஆதரிக்கும் நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அமெரிக்காவின் மிரட்டல்பாகிஸ்தான் ஆட்சியாளர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மூவில் பாராபூர் மற்றும் சங்கம் பகுதிகளுக்கு இடையிலான 189 கி.மீ. நீள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான்தரப்பிலிருந்து கடந்த இரு நாட்களாக ஒரு குண்டு கூட வந்து விழவில்லை.
ஆனால், கடந்த இண்டு மாதங்களாக கடுமையான துப்பாக்கித் தாக்குதலில் பாகிஸ்தான் ஈடுபட்டிருந்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் டைரக்டர் ஜெனரல் குர்பஜன் சிங் கூறுகையில், கடந்த 2நாட்களாக பாகிஸ்தான் தரப்பு மிக நல்லமுறையில் நடந்து கொள்கின்றனர் என்றார்.
பாகிஸ்தான் தரப்பிலிருந்து நடக்கும் எந்தவிதமான தாக்குதலும் உலக கவனத்தை ஈர்த்துவிடும் என்பதால் திடீரெனசமாதானப் புறாவை பறக்கவிட்டுள்ளது.