பாலஸ்தீனர்களை சுட்டு வீழ்த்துகிறது இஸ்ரேல்

Subscribe to Oneindia Tamil

ஜெருசலேம்:

அமெரிக்கா மீதான இஸ்லாமிய தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய ராணுவம்தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த 4 நாட்களில் மட்டும் 16 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். பல பாலஸ்தீன பகுதிகளில் அமெரிக்கத்தாக்குதலை ஆதரித்து ஊர்வலங்கள் நடந்தன. இதையடுத்து அந்தப் பகுதிகளில் நுழைந்த அமெரிக்க நட்புநாடான இஸ்ரேலின் ராணுவம் பாலஸ்தீனர்கள் மீது தாக்குதலை தொடங்கியது.

ஏற்கனவே பிரச்சனையில் உள்ள இஸ்ரேல்-பாலஸ்தீன அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு இந்தத் தாக்குதல்களால்பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன அதிபர்களை வெள்ளிக்கிழமை மாலை தொலைபேசியில் தொடர்புகொண்ட அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் உடனடியாக இரு நாடுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையை துவங்குமாறுகேட்டுக் கொண்டார்.

ஆனால், வெள்ளிக்கிழமை இரவிலும் இஸ்ரேலிய டாங்கிகள் காசா ஸ்ட்ரிப் பகுதியில் உள்ள பெய்ட் ஹனூன்நகரில் நுழைந்து தாக்குதல் நடத்தின. இதில் 17 வயது பாலஸ்தீன வாலிபர் கொல்லப்பட்டார். பலர்காயமடைந்தனர்.

பாலஸ்தீனர்கள் திருப்பித் தாக்கியதில் 2 இஸ்ரேலிய வீரர்கள் காயமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+