For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தென்மேற்கு பருவ மழை வலுக்கிறது - குமரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழகத்தில் தென்மேற்குப் பருவ மழை வலுத்து வருகிறது. இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்குப் பருவ மழை தீவிரமடைந்ததையடுத்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழைபெய்துவருகிறது. அடுத்த 2 நாட்களுக்கு இந்த மழை நீடிக்கும் என வானிலை ஆராய்ச்சி நிலையம்அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதிலும் தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் கடந்த 4நாட்களாக அடை மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதிலும் இயல்பு வாழ்க்கை பெரிதும்பாதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில் பாதையில் மழை நீர் புகுந்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது.இதையடுத்து மதுரை-குருவாயூர், நாகர்கோவில்-திருவனந்தபுரம் ரயில்கள் செவ்வாய்க்கிழமை ரத்துசெய்யப்பட்டன.

பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர் நிரம்பி வழிகிறது.

சென்னையிலும் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. நகரின்அனைத்துப் பகுதிகளிலும் பெய்த இந்த மழையால் கடந்த 2 நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து குளுமைபரவியது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X