தலிபான்களை தாக்கி முன்னேறும் எதிர் படையினர்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் நார்தர்ன் அல்லயன்ஸ் படையினர் தலிபான் படையினரைஎதிர்த்து வேகமாக முன்னேறி வருகின்றனர்.
மேலும் கடந்த மாதம் அமெரிக்காவில் நடந்த தாக்குதலை அடுத்து, அமெரிக்காவும் தலிபான்கள் மீதுபோர்தொடுக்கும் நிலையில் உள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் போர் அதிகரித்து வருகிறது.
தற்போது நார்தர்ன் அல்லயன்ஸ் படையினர் தலிபான் வசமிருந்த டக்கார் மாகாணத்தை பிடிக்க கடுமையாகப்போராடிவருகிறார்கள். தற்போது நார்தர்ன் அல்லயன்ஸ் படையினர் டக்கார் தலைநகர் டாலகானைநெருங்கிவிட்டனர்.
இந்நகரம் தஜிகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ளது. மேலும் டாலகான் தற்போது தலிபான்களின்வசம் உள்ளதால், அதைப் பிடித்தால்தான் தங்கள் ஆதரவு நாடான தஜிகிஸ்தானுக்குச் செல்ல நார்தர்ன்அல்லயன்சுக்கு வசதியாக இருக்கும்.
எனவே நார்தர்ன் அல்லயன்ஸ் படையினர் கடுமையாகப் போராடி முன்னேறி வருகின்றனர்.
இதுகுறித்து நார்தர்ன் அல்லயன்ஸ் படைவீரர்கள் கூறுகையில், இந்தப் பகுதியைப் பிடிக்க நாங்கள் கடுமையாகப்போராடி வருகிறோம். இன்னும் சில நாட்களில் நாங்கள் அதைப் பிடித்துவிடுவோம். முதலில் சிறுசிறுகிராமங்களைப் பிடித்துவிட்டு, பிறகு பெரிய நகரங்களைப் பிடிப்பதே எங்கள் திட்டம் என்கின்றனர்.
தொடர்ந்து தீவிர போர் நடந்து வருகிறது. அமெரிக்கத் தாக்குதலை எதிர்கொள்ள தனது படைகளை தலிபான்கள்நாடு முழுவதும் அனுப்பிவிட்டதால், எதிர்ப் படையினரான நார்த்தர்ன் அலையன்ஸை எதிர்த்துப் போரிடஅவர்களிடம் போதிய படை பலம் இல்லை.
இதனால் தலிபான்கள் பெரும் சிக்கலில் உள்ளனர்.