திண்டுக்கல்லில் வீட்டில் பூட்டி வைக்கப்பட்டிருந்த மருமகள் மீட்பு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே சீவல்சரகு என்ற கிராமத்தில் உள்ள சமத்துவபுரத்தில் ஒரு பெண்ணை அவரது மாமியார்வீட்டுக்குள் பூட்டிவைத்து கொடுமைப் படுத்தியதைப் போலீசார் கண்டுபிடித்து மீட்டனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு,
திண்டுக்கல் மாவட்டத்தில் சீவல்சரகு கிராமத்தில் சமத்துவபுரம் உள்ளது. இங்கு வசிக்கும் சியாமளா என்றபெண்ணை அவரது மாமியார் அலமேலு வீட்டுக் பூட்டிவைத்துக் கொடுமைப்படுத்தி வந்துள்ளார். இதைசியாமாவின் கணவரும் கண்டுகொள்ளவில்லை
இதுகுறித்து திண்டுக்கல் உதவிக்கரம் என்ற போலீஸ் அமைப்புக்கு ராஜேந்திரன் என்பவர் தகவல் கொடுத்துள்ளார்.
(இந்த உதவிக்கரம் அமைப்பு பெண் போலீசாரைக் கொண்டது. பெண்களுக்கு ஏற்படும் கொடுமைகளான,வரதட்சணைக் கொடுமை, ஈவ்டீசிங் போன்ற கொடுமைகளை தடுப்பதற்காக இந்த அமைப்பு நியமிக்கப்பட்டுள்ளது.இந்த அமைப்பை 1091 எனற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.)
தகவல் அறிந்தவுடன் இவர்கள் சீவல்சரகு சென்ற போலீசார் அலமேலுவை மிரட்டி சியாமளாவை விடுவித்தனர்.ஒரு சிறிய அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்தார் சியாமளா.
இனிமேல் அலமேலுவுடன் சேர்ந்து வசிக்க விரும்பவில்லை என சியாமளா கூறினார். இதையடுத்து சியாமளாவின்கணவருடன் போலீசார் பேச்சு நடத்தினர். அவர் தனது தாயிடம் இருந்து தனியே பிரிந்து தனிக்குடித்தனம் நடத்தத்தயாராக இருப்பதாகக் கூறினார்.
ஆனால், இதை அலமேலு எதிர்த்தார். இதையடுத்து அலமேலுவுடன் போலீசார் பேச்சு நடத்தி அவரது மகனைதனிக்குடித்தனம் செல்ல சம்மதிக்க வைத்தனர்.
பின்னர் போலீசாரே அவர்கள் தனிக் குடித்தனம் செய்ய வேண்டிய உதவிகளை செய்து கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications