வேட்பு மனுவே தாக்கல் செய்யப்படாத பஞ்சாயத்து
Subscribe to Oneindia Tamil
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கொட்டகச்சேந்தல் பஞ்சாயத்தில், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்காகயாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
விருதுநகர் மாவட்டம் நரிக்குடி யூனியனில் உள்ளது கொட்டகச்சேந்தல். இந்தப் பஞ்சாயத்தில் ஆயிரத்து 142வாக்காளர்கள் உள்ளனர்.
தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் அதிகம் இருப்பதாக கூறி கடந்த 1996ம் ஆண்டு நடந்த உள்ளாட்சிதேர்தலில் இந்த பஞ்சாயத்து தலைவர் பதவி தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது.
ஆனால் அப்பகுதியில் உள்ள சிலர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த தேர்தலில் யாரும் போட்டியிட வில்லை.
தற்போது நடக்க உள்ள தேர்தலிலும் இந்த பஞ்சாயத்தில் யாரும் மனுத் தாக்கல் செய்யவில்லை.












Click it and Unblock the Notifications