மதுரை காமராசர் பல்கலைக்கழத்தில் பஸ், வேன் தீக்கிரை
மதுரை:
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பஸ் மற்றும் வேன் ஆகியவை தீயில்எரிந்து சாம்பலாயின.
மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் பணியாளர்களை ஏற்றிச் செல்வதற்காக பல பஸ்களும்,வேன்களும் உள்ளன. நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த வாகனங்கள் அனைத்தும் பல்கலைக்கழக வளாகத்தில்நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு பஸ்சில் இரவில் திடீரென தீப்பிடித்தது. இந்தத் தீ அருகில்நிறுத்திவைக்கப்பட்டிருந்த வேனுக்கும் பரவியது. இதைக்கண்டு அங்கு காவலுக்கு இருந்த காவலர்கள் விரைந்துசென்று தீயை அணைக்க முயன்றனர். பிறகு தீயணைப்புப் படையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களும்விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால் அந்த 2 வாகனங்களும் தீயில் முழுமையாக எரிந்து கருகி சாம்பலாயிவிட்டன.
இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்து தற்செயலாக நடந்ததா அல்லது விஷமிகளின்கைவரிசையா என்று விசாரணை செய்து வருகின்றனர்.