சிதறுகிறது தலிபான் படை: இந்தியா தகவல்
டெல்லி:
ஆப்கானிஸ்தானில் அமெரிக்க விமானங்கள் நடத்தி வரும் தாக்குதலால் தலிபான் படைகள் கட்டுப்பாட்டைஇழந்து சிதறி வருகின்றன என இந்தியா கூறியுள்ளது.
அவர் கூறுகையில்,
தக்கார் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் தலிபான்களை நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் சுற்றி வளைத்துத்தாக்கி வருகின்றனர். இதனால் வானிலிருந்து அமெரிக்கா அடிக்க தரையிலிருந்து நார்த்தன் அலையன்ஸ் அடிக்கதலிபான்கள் சிதறி வருகின்றனர்.
இந்தச் சண்டையில் பல தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். நார்த்தர்ன் அலையன்ஸ் தரப்பிலும் இருகமாண்டர்கள் இறந்துள்ளனர்.
தலிபான்களின் விமான எதிர்ப்புப் படையின் கமாண்டர் அமெரிக்க குண்டுவீச்சில் கொல்லப்பட்டுவிட்டார்.அவர்களின் விமான எதிர்ப்புக் கட்டமைப்பும் குலைக்கப்பட்டுவிட்டது.
இந்தியா உள்ளிட்ட பல நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் ஜனாதிபதி புர்ஹானுதீன் ரப்பானி,தஜிகிஸ்தான் அதிபரை அவரது நாட்டில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று பாகிஸ்தானில் வந்திறங்கிய 3 ஆப்கானிஸ்தான் விமானங்களை பாகிஸ்தான் கையகப்படுத்தியது.அமெரிக்க நெருக்குதலையடுத்து இவற்றை பாகிஸ்தான் பிடித்து வைத்தது. ஆனால், இன்று அதில் 2ஹெலிகாப்டர்களை தலிபான்களிடமே பாகிஸ்தான் திருப்பி வழங்கியுள்ளது.
தலிபான் தலைவர் முல்லா ஒமரின் நெருங்கிய உறவினர்கள் 2 பேர் அமெரிக்கத் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி ஆப்கானிஸ்தான் மக்களுக்கு 1 மில்லியன் டன் கோதுமை வழங்கஇந்தியா திட்டமிட்டுள்ளது. இது தவிர ஆயிரக்கணக்கான கூடாரங்களும் வழங்கப்படும்.
ஆப்கானிஸ்தனில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்கள் அழிக்கப்பட்டுவிட்டால் இந்தியாவுக்கும் அது மிகஉதவிகரமாக இருக்கும். இந்த முகாம்களில் பாகிஸ்தான் காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு பயிற்சி தந்து வருகிறது.
ஆப்கானிஸ்தான் குறித்து செய்தி சேகரிக்க பாகிஸ்தான் செல்ல விரும்பும் இந்திய நிருபர்களுக்கு பாகிஸ்தான் விசாவழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.