For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உள்ளாட்சி தேர்தல்... பாதுகாப்பு பணியில் 75 ஆயிரம் போலீசார்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியில் 75 ஆயிரம் போலீசார் ஈடுபடுவார்கள் என்று தமிழகஅரசின் உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 16 மற்றும் 18ம் தேதிகளில் தமிழகத்தில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இந்ததேர்தல் அமைதியான முறையில் நடைபெற எல்லா இடங்களிலும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன.

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நரேஷ் குப்தா நிருபர்களுக்கு பேட்டியளித்த போதுகூறுகையில்,

உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்த 71 துணை ராணுவ படையை அனுப்புமாறு மத்திய அரசிடம் தமிழகஅரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனாலும் நாடு முழுவதிலும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டிய சூழ்நிலை நிலவி வருவதால் தமிழக அரசின்கோரிக்கை ஏற்கப்படுமா என்பது தெரியவில்லை.

தேர்தல் பாதுகாப்பு பணியில் தமிழக போலீசுக்கு உதவி புரிய 12 படைகளை அனுப்பி வைக்குமாறு கர்நாடகா,ஆந்திரா, கேரளா மற்றும் வட மாநில அரசுகளை தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 7 ஆயிரம் ஊர்க்காவல் படையினர், ஆயிரம் ஓய்வுபெற்ற போலீசார், 1,500தீயணைப்பு போலீசார், 13 ஆயிரம் முன்னாள் ராணுவ வீரர்கள் ஈடுபடுவார்கள்.

மேலும் இது தவிர 38 ஆயிரம் தமிழக போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். மாவட்டத்திற்கு ஒருதமிழக சிறப்பு போலீஸ் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படும்.

தமிழகம் முழுவதிலும் 78 ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வரும் 16ம் தேதி முதல் கட்டமாக 42ஆயிரம் வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.

மீதமுள்ள வாக்குச்சாவடிகளில் 18ம் தேதி இரண்டாவது கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X