For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காவிரியில் தண்ணீர் விட கர்நாடகத்துக்கு திடீர் உத்தரவு

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

நேற்று டெல்லியில் நடந்த காவிரி நதி நீர் ஆணையக் கூட்டத்தில் தமிழகத்துக்கு கர்நாடகம் தண்ணீர்திறந்துவிடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படாத நிலையில், இரவில் திடீர் என தண்ணீர் திறந்துவிடுமாறுகர்நாடகத்துக்கு காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டது.

புதன்கிழமை காலை பிரதமர் வாஜ்பாய் தலைமையில் சுமார் 3 மணி நேரம் நடந்த காவிரி நதி நீர் ஆணையக்கூட்டத்தில் தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் மறுத்தது. இதையடுத்து பிரதமரை தமிழக முதல்வர்குறை கூறிவிட்டு சென்னை திரும்பினார்.

இந்நிலையில், நேற்று இரவில் காவிரி நதி நீர் ஆணையம் சார்பில் திடீர் அறிவிப்பு ஒன்று வெளியானது.

அந்த அறிவிப்பில், நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி, மேட்டூர் அணைக்குத் தண்ணீர் திறந்துவிட வேண்டும்என்று கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவிட்டது.

கர்நாடக அரசு இதை உறுதி செய்ய வேண்டும என்றும் அந்த அறிவிப்பில் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகத்தில் உள்ள நிலைமைகளை அறிந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகஆணையம் தெரிவித்தது.

கூட்டம் முடிந்து பல மணி நேரங்களுக்குப் பின்னரே இந்த உத்தரவு வெளியிடப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X