முஸ்லீம் மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தவேண்டும்- அல்காய்தா
தோஹா:
முஸ்லீம் மக்கள் அனைவரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி அமெரிக்காவுக்கு எதிராக போரில் இறங்கும்படிதத்தம் நாடுகளை வற்புறுத்த வேண்டும் என்று பின் லேடனின் அல்-காய்தா இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா நடத்தும் தாக்குதல் மற்ற முஸ்லீம் நாடுகளுக்குப் பரவிவிடக்கூடாது. மேலும்ஆப்கானிஸ்தானில் நடத்தப்படும் தாக்குதலில் அப்பாவி மக்கள் யாரும் பழியாகிவிடக் கூடாது.
ஆனால் ஆப்கான் மீது அமெரிக்கா நடத்தும் தாக்குதலை ஆதரிக்கிறோம். ஆனால் ராணுவ உதவி எதுவும்வழங்கமுடியாது என்று அறிவித்தார்கள்.
இதற்கு அல்-காய்தா இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளளது.
இதுகுறித்து அல்-காய்தா இயக்கத்தின் நிர்வாகியும் பின் லேடனின் உதவியாளருமான சுலைமான் அபு காய்த்அல்-ஜஸீரா டிவிக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை)அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதவது,
உலகம் முழுவதும் அமெரிக்கத் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தும் முஸ்லீம் மக்களுக்குத்தலை வணங்குகிறோம்.
மேலும் முஸ்லீம் நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அமெரிக்கத் தாக்குதலுக்கு ஆதரவுதெரிவித்திருந்தாலும், அவர்களை தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்த வேண்டும்என்றும் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும் முஸ்லீம் நாடுகளின் பிரதிநிதிகள், அமெரிக்கத் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். ஆனால்இதுபோன்ற விஷயங்களில் முடிவுகளை இவர்கள் (அமைச்சர்கள் )தீர்மாணிக்கக் கூடாது. மக்கள் தான் தீர்மாணிக்கவேண்டும் என்றார்.
இதற்கிடையில் இஸ்லாமிய நாடுகளின் பிரதிநிதிகள் எடுத்த முடிவு தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றுஅமெரிக்கக வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பவெல் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications