பாகிஸ்தான் மீது இந்தியா அதிரடி தாக்குதல் - 12 தீவிரவாதிகள் பலி
ஜம்மு:
பாகிஸ்தான் எல்லை வழியாக அத்துமீறி நுழைய முயன்ற 12 தீவிரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது.மேலும் எல்லைப் பகுதிகளில் உள்ள பாகிஸ்தான் ராணுவம் மீதும் இந்தியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைக்கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ முகாம்களை அமைத்துள்ளது.அங்குள்ள பாகிஸ்தான் ராணுவத்தினர் உதவியுடன்தான் தீவிரவாதிகள் காஷ்மீருக்குள் நுழைவது வழக்கம்.
இதைத் தடுக்க திங்கள்கிழமை (நேற்று) இரவு பாகிஸ்தான் ராணுவம் மீது இந்தியா திடீர் தாக்குதலை நடத்தியது.பீரங்கிகள், ராக்கெட்டுகள் மற்றும் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தான் ராணுவ முகாம்கள் மீது தாக்குதலைநடத்தியது இந்திய ராணுவம்.
பாகிஸ்தான் ராணுவமும் பதிலடித் தாக்குதல் நடத்தியது. இரவு முழுவதும் துப்பாக்கிச் சண்டை தொடர்ந்தது.
இந்திய ராணுவத்தினரின் இந்தத் தாக்குதலின்போது, காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற 12 தீவிரவாதிகள்கொல்லப்பட்டனர். மேலும் பாகிஸ்தான் ராணுவத்தின் 11 முகாம்கள் அடியோடு அழிந்து நாசமாயின.
இதையடுத்து எல்லைப் பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications