புயல் இன்று கரையைக் கடக்கிறது
சென்னை:
சென்னையிலிருந்து 200 கி.மீ. தூரத்தில் வங்கக் கடலில் உருவான புயல் இன்று (செவ்வாய்க்கிழமை) கரையைக்கடக்க உள்ளது.
இது வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து ஆந்திர கரையோரம் நெல்லூர்-ஓங்கோல் இடையே கரையைக் கடக்கும்.
இதையடுத்து ஆந்திரத்திலும் தமிழகத்திலும் பலத்த மழை பெய்து வருகிறது.
சில தினங்களுக்கு முன் வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இது 75 கி.மீ.வேகத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிகிறது. இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் சூறாவளிக்காற்று வீசும்.
புயலையொட்டி சென்னை துறைமுகம் உள்ளிட்ட துறைமுகங்களில் 3ம் எண் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.
புயல் கரையைக் கடக்கும்போது வட தமிழகத்திலும் தெற்கு ஆந்திராவிலும் மிக பலத்த மழையுடன் கூடியசூறாவளிக் காற்று வீசும். இடி மின்னலும் இருக்கும்.
இதனால் மீனனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். புயலால் ஏற்படும் சேதத்தைசமாளிக்க தமிழக அரசு பல முன்னேற்பாடுகளைச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications