For Daily Alerts
Just In
வரிசையில் நின்று வாக்களித்த பன்னீர்
பெரியகுளம்:
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெரியகுளத்தில் தனது குடும்பத்துடன் சென்று வாக்களித்தார்.
பெரியகுளத்தில் 25வது வார்டில் உள்ள ஆர்.சி. நகராட்சி பள்ளிக்கு இன்று காலையிலேயே அவர் வாக்களிக்க வந்துவிட்டார்.அப்போது அவருக்கு முன்பாக ஏராளமானோர் நின்றிருந்தனர். இதையடுத்து அவர்களுடன் பன்னீர் செல்வமும் வரிசையில் நின்றுவாக்களித்தார்.
அவருடன் அவரது குடும்பத்தினரும் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
முதல்வரான பிறகு அவர் சொந்த ஊருக்குச் செல்வது இதுவே முதல்முறை. அவர் சந்திக்கும் முதல் தேர்தலும் இது தான்.
பன்னீர் செல்வத்தின் வருகையையொட்டி பெரிய குளத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது.
Story first published: Tuesday, October 16, 2001, 5:30 [IST]