சென்னையில் 35 சதவிகிதம் மட்டுமே வாக்குப் பதிவு
சென்னை:
சென்னையில் செவ்வாய்க்கிழமை கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறை காரணமாக 35 சதவிகித வாக்காளர்கள்மட்டுமே வாக்குப் பதிவு செய்தனர்.
இதுவரை நடந்த தேர்தல்களிலேயே இதுதான் மிகவும் குறைவானது என்று தேர்தல் கமிஷன் கூறியுள்ளது.
ஒரு சில இடங்கள் தவிர பெரும்பாலும் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் அமைதியாகவே நடந்தது என்று தேர்தல்கமிஷனர் பி.எஸ் பாண்டியன் கூறினார்.
இதற்கிடையே சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே உள்ள தலையாரிபாளையம் கிராமத்தில், இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பெரும் வன்முறை வெடித்தது.
இவர்களைச் சமாதானப்படுத்த முயன்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. படுகாயம்அடைந்த அவர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனால், போலீசார் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதையடுத்து, வன்முறைக் கும்பல் ஓடிவிட்டது.
ஆனாலும், அப்பகுதியில் உள்ள பெரும்பாலான வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை.












Click it and Unblock the Notifications