வாக்காளர்களுக்கு சிதம்பரம் நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப்பதிவின்போது எதற்கும் அஞ்சாமல் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவைக்கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை கட்சியின் பொதுச் செயலாளர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,
இந்த உள்ளாட்சித் தேர்தல் முறைப்படி நடக்கவில்லை. காவல்துறையினரும் சரியான படி நடந்து கொள்ளவில்லை.
இந்தச் சூழ்நிலையிலும், எதற்கும் அஞ்சாமல், காங்கிரஸ் கட்சிக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், காங்கிரஸ்ஜனநாயகப் பேரவைக் கட்சிக்கும் ஆதரவு அளித்த வாக்காளர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்என்றார் சிதம்பரம்.












Click it and Unblock the Notifications