ஆந்திராவில் புயல், வெள்ளம்: 22 பேர் பலி
ஐதராபாத்:
ஆந்திரா மாநிலம் நெல்லூர் கடற்கரையில் வீசிய புயலுக்கு 22 பேர் பலியாகியுள்ளனர் மீட்பு பணிகள் முழு வீச்சில்நடைபெற்று வருகின்றன.
புயல் கரையைக் கடந்த போது பெய்த கடும் மழைக்கு இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். மீட்பு பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மீட்பு பணிகளை மேற்கொண்டு வரும் நிவாரணதுறை கமிஷனர் கே. ரோஷையா செய்தியாளர்களிடம்கூறியதாவது:
செவ்வாய்க்கிழமை வீசிய புயல் காரணமாக பெய்த கடும் மழைக்கு கர்னூலில் 16 பேர் பலியாகியுள்ளனர்.சித்தூரில் 4 பேரும், ஆன்ந்தபூர் மற்றும் நெல்லூரில் ஒருவரும் பலியாகியுள்னர். ஆனாலும் எத்தனை பேர் இறந்துபோயுள்ளனர் என்று உறுதியிட்டு இப்போது கூற முடியாது.
கடப்பா பகுதியில் காணமல் போன 15 பேர் புகாவாகு ஏரியில் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
புயலில் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதி நெல்லூர்தான். இங்குள்ள 125 குளங்களும் நிரம்பி வழிகின்றன.
குண்டூருக்கும், சென்னைக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. பெரும்பாலான ரயில்கள் ரத்துசெய்யப்பட்டுவிட்டன. சில ரயில்கள் வேறு வழியில் திருப்பி விடப்பட்டுள்ளன.
ரயில் ரத்து செய்யப்பட்டதால் செல்ல முடியாமல் வெள்ளம் சூழப்பட்டுள்ள பகுதியில் தவித்து வரும் பயணிகளுக்குஹெலிகாப்டர் மூலமாக உணவுப் பொட்டலம் போடப்படுகிறது என்று கூறினார்
ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், குண்டூர்-சென்னை இடையேயான ரயில் போக்குவரத்து புதன்கிழமை மாலைதுவங்கிவிடும். சேதமடைந்துள்ள ரயில் பாதைகள் இரண்டு நாட்களில் முழுவதுமாக சரிசெய்யப்பட்டுவிடும்.
மங்களகிரி பகுதியில் சரக்கு ரயில் தடம்புரண்டுள்ளதால் வேறு பாதைகளில் ரயிலை திருப்பி விட முடியாத நிலைஉள்ளது.
இந்நிலையில் கடப்பா பகுதியை புதன்கிழமை பார்வையிட்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புயலால்பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எல்லா உதவியும் செய்வதாக உறுதி அளித்தார்.
புகாவாகு ஏரியின் திறந்துவிடப்பட்டதால்தான் கடப்பா பகுதி மிகவும் பாதிக்கப்பட்டது. ஏரி ஏன்திறந்துவிடப்பட்டது என்பது குறித்து விவரமான அறிக்கையை சமர்பிக்குமாறும் அவர் அதிகாரிகளுக்குஉத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications