For Quick Alerts
For Daily Alerts
Just In
கள்ள ஓட்டுப் போட முயற்சி... ஆற்காடு தம்பிக்கு வலைவீச்சு
சென்னை:
சென்னையில் உள்ளாட்சித் தேர்தலின்போது கள்ள ஓட்டுப் போட கும்பலைத் திரட்டியதாக முன்னாள் அமைச்சர்ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை உள்ளாட்சித் தேர்தல் நடந்தது. இதில் பல இடங்களில் கள்ள ஓட்டுப் போடமுயன்றதாக திமுகவினர் பலரை போலீஸார் கைது செய்தனர்.
கள்ள ஓட்டுப் போட கும்பலைச் சேர்த்ததாக ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜனை தற்போது போலீஸார் தேடிவருகின்றனர். இவர்கள் அண்ணா நகர் பகுதியில் கள்ள ஓட்டுப் போட முயன்றதாக போலீஸார் கூறியுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, October 17, 2001, 5:30 [IST]