1000 ரூபாய்க்கு ஆசைப்பட்டு கம்பி எண்ணும் தாசில்தார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் விழுப்புரம் துணை தாசில்தார் பாலகிருஷ்ணன்.
விழுப்புரத்தில் துணை தாசில்தாராக இருப்பவர் பாலகிருஷ்ணன். இவர் பதவியிலிருந்து ஓய்வு பெற இன்னும் 6 வருடங்கள் உள்ளன. இந்நிலையில், சண்முகம் என்பவருக்கு சான்றிதழ் ஒன்று வழங்குவதற்காக ரூ. 1000 தருமாறு கேட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸில் சண்முகம் புகார் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸாரின் ஆலோசனைப்படி ரூ. 1000 பணத்துடன் சண்முகம் துணை தாசில்தார் பாலகிருஷ்ணனிடம் சென்றார்.
ரூபாயை வாங்கியபோது மறைந்திருந்த போலீஸார் கையும் களவுமாக பாலகிருஷ்ணனைக் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications