For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரேலிய அமைச்சர் சுட்டுக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஜெருசலேம்:

இஸ்ரேலிய சுற்றுலாத்துறை அமைச்சர் ரஹவாம் ஸீவி சுட்டுக் கொல்லப்பட்டார். பாலஸ்தீன போராட்ட அமைப்பின்தலைவரை இஸ்ரேல் கொன்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்தக் கொலை நடந்துள்ளது.

தீவிர யூத மத ஆதரவாளரான இவர் இன்று காலை (புதன்கிழமை) ஜெருசலேமில் உள்ள ஹயாத் ஹோட்டலில்வைத்து சுடப்பட்டார். 8வது மாடியில் தங்கியிருந்த இவரது அறைக்குள் அதிரடியாகப் புகுந்த தீவிரவாதிகள்தலையிலும் நெஞ்சிலும் மூன்று முறை சுட்டனர். இவரது மனைவி மீதும் குண்டுகள் பாய்ந்தன.

இதையடுத்து அவர் உடனடியாக ஹடாஸா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சைபலனின்றி பிற்பகலில் இறந்தார்.

இவரை நாங்கள் தான் சுட்டோம் என்று பி.எல்.ஓ. அமைப்பின் பாலஸ்தீன விடுதலை இயக்க முன்னணிஅறிவித்துள்ளது. இந்த அமைப்பின் தலைவரான முஸ்தபா ஜிப்ரி கடந்த ஆகஸ்ட் 27ம் தேதி இஸ்ரேலியராணுவத்தால் கொல்லப்பட்டார். இவரை ராக்கெட் வீசி இஸ்ரேல் கொன்றது.

இதற்குப் பதிலடியாகத் தான் இஸ்ரேலிய அமைச்சரைக் கொன்றதாக பாலஸ்தீன அமைப்பு கூறியுள்ளது. ஆனால்,முஸ்தபா இஸ்ரேலில் பல தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அந் நாடு குற்றம் சாட்டியுள்ளது.

அமைச்சரைக் கொன்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலஸ்தீனர்களின் ரத்தம் அவ்வளவுகேவலாமானது அல்ல என்பதை இஸ்ரேல் உணர வேண்டும். பாலஸ்தீனர்களைத் தாக்கும் இஸ்ரேலியர்களுக்குஇனி பாதுகாப்பு இருக்காது. எங்களைத் தாக்கினால் உயிர் பழி வாங்குவோம் என்று அறிவித்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் அமெரிக்கத் தாக்குதலையடுத்து இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பிரச்சனைமுற்றியுள்ளது. இந் நிலையில் இத் தாக்குதல் நடந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X