ஆளுநரிடம் தமிழக தே.ஜ. கூட்டணி புகார்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தலின்போது நடந்த வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, ஆளுநர்டாக்டர் சி. ரங்கராஜனிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்துள்ளனர் தமிழக தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சியினர்.
திமுக சார்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனும், பாஜக சார்பாக அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இல. கணேசனும், பாமக சார்பாக அக்கட்சி எம்.பியான ஏ.கே. மூர்த்தியும் ஆளுநர் மாளிகைக்குச்சென்றனர்.
அதிமுகவினர் மட்டுமல்லாது காவலுக்கு நின்ற போலீசாரும் வன்முறையில் ஈடுபட்டனர் என்றும் 353 வாக்குச்சாவடிகளில் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஆளுநரிடம் கூறினர்.
இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் ஆளுநரிடம் கேட்டுக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications