சென்னையில் 7 வாக்குச் சாவடிகளில் 19ம் தேதி மறு தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

செவ்வாய்க்கிழமை (நேற்று) நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவின்போது,சென்னையில் பல இடங்களில் நடந்த வன்முறை சம்பவங்களையடுத்து 7 சாவடிகளில் மறு வாக்கு பதிவு நடத்ததேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மாநில தேர்தல் கமிஷனர் பி.எஸ். பாண்டியன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்தபேட்டியின் போது கூறியதாவது:

தமிழகத்தில் பெருமளவில் வன்முறை எதுவும் நடைபெறவில்லை. தேர்தல் பார்வையாளர்கள் கொடுத்தஅறிக்கையின் அடிப்படையில் சென்னை நகரில் 7 இடங்களில் மறு வாக்கு பதிவு நடத்தப்படும்.

சென்னையின் 154வது வார்டில் 2182வது எண் ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்கு சாவடியிலும், 155வது வார்டில்2237வது எண் உடைய ஆண்கள் மற்றும் பெண்கள் வாக்கு சாவடியிலும், 115வது வார்டில் 1540வது எண் உடையஆண்கள் மற்றும் பெண்கள் வாக்கு சாவடியிலும், 119வது வார்டில் 2060வது எண் உடைய பெண் வாக்குசாவடியிலுமாக 7 வாக்கு சாவடியில் மறு வாக்கு பதிவு நடத்தப்படும். இந்த மறு வாக்கு பதிவு வரும் 19ம் தேதிநடைபெறும்.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரத்தில் அச்சரப்பாகம் பேரூராட்சியில் 3வது வார்டில் ஓரிக்கை பஞ்சாயத்து யூனியனில் 11வது வார்டிலும்மறு வாக்கு பதிவு நடைபெறும்.

கடலூர்:

கடலூரில் மங்களூர் ஒன்றியத்தில் 19வது வார்டிலும், விருதுநகர் மாவட்டத்தில் 11வது வார்டிலும் மறு வாக்கு பதிவுநடைபெறும்.

திருவள்ளூர்:

திருவள்ளுர் மாவட்டம், கும்மிடிபூண்டி ஊராட்சி ஒன்றியத்தில் தேர்தல் சாதனங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவந்த புகாரின் அடிப்படையில் அங்கு 9 வாக்கு சாவடிகளில் மறுவாக்கு பதிவு நடைபெறும். மறு வாக்கு பதிவுவரும் 19ம் தேதி நடைபெறும் என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+