For Daily Alerts
Just In
சென்னை-கூடூர் பாதையில் விரிசல் - 2 ரயில்கள் ரத்து
சென்னை:
சென்னை-கூடூருக்கு இடையே உள்ள ரயில் பாதையில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதையடுத்து, 2ரயில்களை தென்னக ரயில்வே புதன்கிழமை (இன்று) ரத்து செய்துள்ளது.
நெல்லூர் அருகே நேற்று கரை கடந்த புயல் காரணமாக, சென்னைக்கும் கூடூருக்கும் இடையே உள்ள ரயில்பாதையில் உள்ள தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனால், சென்னையிலிருந்து வடக்கு நோக்கிச் செல்லும் ரயில்கள் தாமதமாகவே கிளம்பிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஹெளராவுக்குச் செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலும், அகமதாபாத்துக்குச் செல்லும் நவஜீவன்எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஆனால், பாட்னாவுக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஒரு சிறப்பு ரயில் கிளம்பவுள்ளது.
தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
Comments
Story first published: Wednesday, October 17, 2001, 5:30 [IST]