இந்தியா-அமெரிக்கா இடையே தீவிரவாத தடுப்பு ஒப்பந்தம்
டெல்லி:
இந்திய மற்றும் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான தீவிரவாதத் தடுப்பு ஒப்பந்தத்தில் உள்துறை அமைச்சர்எல்.கே. அத்வானியும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் காலின் பாவல்லும் புதன்கிழமை (இன்று)கையெழுத்திட்டனர்.
இந்நிலையில், தீவிரவாதத்தை ஒழிப்பதில் இரு நாடுகளுக்கிடையே உள்ள பரஸ்பர ஒத்துழைப்புக்கானஒப்பந்தத்தில் இன்று அத்வானியும் பாவல்லும் கையெழுத்திட்டனர்.
பயங்கரவாதக் குற்றங்கள் குறித்து தீவிரமாகச் செயல்படவும், அவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும்இந்த ஒப்பந்தத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் எந்த அளவுக்கு பயனளிக்கும் என்பது போகப் போகத்தான் தெரியும். அமெரிக்காவின்செயல்பாடுகளிலும் இது விரைவில் வெளிப்படத்தான் போகிறது.
முன்னதாக இதுகுறித்து அத்வானியும் பாவல்லும் அரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும் பாவல் இன்று சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். தற்போதுபிரதமர் வாஜ்பாயும் பாவல்லும் பேசிக் கொண்டிருக்கின்றனர்.