கிராமப் புறங்களில் அதிக வாக்குப் பதிவு
சென்னை:
முதல் கட்ட உள்ளாட்சித் தேர்தலில் பல மாவட்டங்களில் கிராமப் புறங்களில்தான் அதிக அளவு வாக்குகள்பதிவாகியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை கிராமப் புறங்களில்தான் அதிக அளவில் வாக்காளர்கள்வாக்களித்துள்ளனர்.
இங்கு மொத்தம் 71 சதவீத அளவுக்கு கிராமப்புறங்களில் வாக்குப் பதிவு நடந்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 68சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன என்று மாவட்ட ஆட்சித் தலைவர் ராஜாராமன் கூறியுள்ளார்.
இங்கு நடக்கவுள்ள இரண்டாவது கட்ட வாக்குப் பதிவுக்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் அவர்கூறியுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இங்கும் கிராமப் புறங்களில்தான் அதிகஅளவுக்கு வாக்குகள் பதிவாகின.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகபட்சமாக அகஸ்தீஸ்வரம் பேரூராட்சியில் 70.5 சதவீத வாக்குகள்பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக முன்சிறையில் 58.9 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.












Click it and Unblock the Notifications