பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் அதிகாரிக்கும் ஆந்த்ராக்ஸ்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அதிகாரி ஒருவருக்கு ஆந்த்ராக்ஸ் கிருமி தாக்கியிருக்கலாம் என்றசந்தேகத்தில் வியாழக்கிழமை அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்றும் பாகிஸ்தானியர் ஒருவருக்கு நேற்று தபாலில் ஒருகவர் வந்துள்ளது. அதை அவர் பிரித்துப் பார்த்தபோது, அதில் வெள்ளைப் பவுடர் இருந்துள்ளது.

உடனே அவர் இதுபற்றி உயர் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளார். அவர்கள் அந்தப் பவுடரில் ஆந்த்ராக்ஸ்கிருமி இருக்கலாம் என்று தெரிகிறது. இவருக்கு ஆந்த்ராக்ஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சம் காரணமாகஇவரை உடனே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதுகுறித்து பாகிஸ்தானிய மருத்துவ அறிவியல் மையத்தின் டாக்டர் ஒருவர் கூறுகையில்,

எங்கள் நிறுவனத்தில் உள்ள சிகிச்சைப்பிரிவில் பிரிட்டிஷ் தூதரகத்தில் பணியாற்ம் ஒருவர் ஆந்த்ராக்ஸ் கிருமிதாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவருக்குத் தபாலில் வந்த பவுடர் பற்றியும், அதில் கலந்துள்ள பொருள்கள் மற்றும் அவற்றின் தன்மைஆகியவற்றைப் பற்றியும் நாங்கள் ஆராய்ச்சி செய்து வருகிறோம்.

அந்த அதிகாரியின் உடலில் ஆந்த்ராக்ஸ் கிருமி தாக்கியதற்கான எந்தவித அறிகுறியும் இதுவரை தெரியவில்லை.இருப்பினும் பரிசோதனை செய்யப்பட்டு வரும் பவுடரைப் பற்றி முழுவிவரமும் தெரிந்தால்தான் எதையும்உறுதியாகக் கூறமுடியும்.

இவ்வாறு அந்த டாக்டர் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+