For Quick Alerts
For Daily Alerts
Just In
பெர்னாண்டஸ் அமைச்சரானதை எதிர்த்து காங். போராட்டம்
சென்னை:
ஜார்ஜ் பெர்னாண்டஸை மீண்டும் மத்திய அமைச்சராக்கியதை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் போராட்டம்நடத்தப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மிகப் பெரிய தேச விரோத குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜார்ஜ் பெர்னாண்டஸை அமைச்சர் பதவியில் அமர்த்தியதுமிகப் பெரிய தவறு. அதை எதிர்த்து தமிழகம் முழுவதிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் மிகப் பெரும் போராட்டம்நடத்தப்படும்.
தமிழக உள்ளாட்சித் தேர்தலில் வரலாறுகாணாத வகையில் முறைகேடுகள், கலவரம் ஆகியவை நடந்துள்ளன. தவறுசெய்தவர்கள் மீது மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கையின்போது ஆளுநர் ரங்கராஜன் சென்னையில் இருந்து வாக்கு எண்ணிக்கை நடவடிக்கைகளைகண்காணிக்க வேண்டும் என்றார் இளங்கோவன்.
Comments
Story first published: Friday, October 19, 2001, 5:30 [IST]