தேர்தல் தகராறில் பா.ம.க. பிரமுகர் கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
உள்ளாட்சித் தேர்தல் தகராறில் பாட்டாளி மக்கள் கட்சி பிரமுகர் கொலை செய்யப்பட்டார்.
பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் மதுராந்தகம் அருகேயுள்ள விளம்பூர் கிராமத்தைச்சேர்ந்தவர்.
உள்ளாட்சித் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவின் போது பன்னீர் செல்வம் கோஷ்டிக்கும், இன்னொருகோஷ்டிக்கும் தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டது.
இதையடுத்து இரு தரப்பினரும் பயங்கரமாகத் தாக்கிக் கொண்டனர். இதில் பன்னீர் செல்வம் படுகாயமடைந்தார்.அவர் தவிர மேலும் பலரும் காயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் செங்கல்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பன்னீர் செல்வம்வெள்ளிக்கிழமை இறந்தார்.
இதுதொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications