தலிபான் வீரர்கள் மீது முதல்முறையாக அமெரிக்கா தாக்குதல்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தானின் வட பகுதி சாமாங்கன் மாகாணத்தில் அமெரிக்க போர் விமானங்கள் இன்று (சனிக்கிழமை)பகலில் தாக்குதல் நடத்தின.
இதுவரை தலிபான்களின் விமானப் படைத் தளங்கள், பின் லேடனின் முகாம்கள், ராணுவக் கிடங்குகள்ஆகியவற்றின் மீது தான் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வந்தது. காபூலில் ஓரிடம் தவிர தலிபான் படைகள் மீதானதாக்குதலைத் தவிர்த்தே வந்தது.
இப்போது இரண்டாவது முறையாக தலிபான் படைகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. காலை 6 மணிக்குதலிபான்கள் மீது இத் தாக்குதல் நடந்தது என அந்தப் பகுதியை தீவிரமாகக் கண்காணித்து வரும் நார்த்தர்ன்அலையன்ஸ் படையினரின் செய்தித் தொடர்பாளர் அஷ்ரப் நதீம் தெரிவித்தார்.
தங்களை அமெரிக்கா ஒதுக்கி வருவதாக நார்த்தர்ன் அலையன்ஸ் படையினர் கூறி வரும் நிலையில் அவர்களுக்குஉதவும் வகையில் தலிபான்களின் வட பகுதி நிலைகளை அமெரிக்கா தாக்கியுள்ளது.












Click it and Unblock the Notifications