196 இந்திய மீனவர்கள் பாகிஸ்தானிலிருந்து விடுதலை

Subscribe to Oneindia Tamil

கராச்சி:

பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 196 இந்திய மீனவர்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுதலைசெய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் கடல் பகுதிகளில் மீன் பிடித்தது தொடர்பாக பாகிஸ்தானால் கைது செய்யப்பட்ட இந்த 196மீனவர்களும் குஜராத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய 36 படகுகளையும் பாகிஸ்தான் பறிமுதல் செய்திருந்தது.

சில நாட்களுக்கு முன்னரே இவர்களுடைய விடுதலை குறித்து பாகிஸ்தான் உறுதியளித்திருந்தது. ஆனால்அவர்களுடைய படகுகளைச் செப்பனிடுவதற்கு கால தாமதம் ஆகிவிட்டதால், இந்த விடுதலையும்தாமதமாகிவிட்டது.

இந்த 196 மீனவர்களுடன் அவர்களுடைய 36 படகுகளும் திரும்பி ஒப்படைக்கப்பட்டன.

இதேபோல், இந்தியக் கடல் பகுதிகளில் மீன் பிடித்ததற்காக, 202 பாகிஸ்தான் மீனவர்கள் இந்தியச் சிறைகளில்அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடைய 21 படகுகளையும் இந்தியக் கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த 202 பாகிஸ்தான் மீனவர்களும் ரம்ஜான் மாதம் பிறப்பதற்குள் இந்திய அரசால் விடுதலை செய்யப்படுவார்கள்என்று பாகிஸ்தான் மீனவர் கூட்டுறவுச் சங்க செய்தித் தொடர்பாளர் கஸான்பர் அலி புட்டோ நம்பிக்கைதெரிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+