புலிகளின் நிதி வசூல்: இங்கிலாந்திடம் இலங்கை கோரிக்கை
Subscribe to Oneindia Tamil
லண்டன்:
விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இங்கிலாந்து அரசைஇலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கேட்டுக் கொண்டுள்ளார்.
நாங்களும் தீவிரவாதத்தை எதிர்த்துத்தான் கடும் போராட்டம் நடத்தி வருகிறோம். எனவே தீவிரவாதத்தை எதிர்த்துதாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இங்கிலாந்துக்கு எங்கள் நிலை தெளிவாகத் தெரியும்.
இங்கிலாந்து நாட்டினர் இதற்கு மேலும் விடுதலைப்புலிகளுக்கு நிதியுதவி அளிப்பதை எங்களால் பொறுத்துக்கொண்டிருக்க முடியாது. எனவே இத்தகைய நிதியுதவி அளிப்பவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இங்கிலாந்து அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார் சந்திரிகா.
தீவிரவாதிகள் பட்டியலில் விடுதலைப்புலிகளையும் இங்கிலாந்து சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications