துணை மேயர் தேர்தலில் மேயரும் வாக்களிக்கலாம் - தேர்தல் கமிஷனர்
சென்னை:
துணை மேயர் தேர்தலில் மேயரும் வாக்களிக்கலாம் என்று தமிழக தேர்தல் கமிஷனர் பி.எஸ். பாண்டியன்கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
துணை மேயரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலில் மேயர் வாக்களிக்க முடியுமா என்ற சந்தேகம் பலருடைய மனதில்இருந்து வந்தது. நிச்சயமாக அவரும் வாக்களிக்க முடியும்.
கடந்த 25ம் தேதி பதவி ஏற்காத கவுன்சிலர்களும் துணை மேயர், துணைத் தலைவர்கள் தேர்தலில் வாக்களிக்கலாம்.
6 மாநகராட்சிகள், 102 நகராட்சிகள் உள்பட அனைத்து உள்ளாட்சி மன்றங்களுக்கான துணைத் தலைவர்களைத்தேர்ந்தெடுக்கும் தேர்தல் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளன.
தேர்தலில் ஒருவருக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் அதிக வாக்குகள் பெற்றவரே வெற்றி பெற்றவராகஅறிவிக்கப்படுவார். முதல் இரண்டு இடங்களைப் பெற்றவர்கள் சம வாக்குகள் பெற்றிருந்தால், குலுக்கல் முறையில்யாராவது ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.
மொத்த உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்தால் மட்டுமே தேர்தல் நடத்த முடியும். அப்படிபாதிக்கு மேற்பட்டவர்கள் வராவிட்டால், 30 நிமிடங்கள் காத்திருந்த பிறகு தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரமும்தேர்தல் கமிஷனுக்கு உண்டு என்றார் பாண்டியன்.












Click it and Unblock the Notifications