முஷாரப் ஆட்சி கவிழும்: சவுதி இளவரசர் எச்சரிக்கை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
ரம்ஜான் மாதம் துவங்கிய பின்பும் ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க தாக்குதல் தொடர்ந்தால் பாகிஸ்தான்உள்ளிட்ட பல முஸ்லீம் நாடுகளில் ஆட்சி கவிழும் வாய்ப்புள்ளது என்று சவுதி அரேபிய இளவரசர்துர்க்கி-அல்-சுதைரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விரைவில் ஈராக்கையும் அமெரிக்கா தாக்கலாம் என்று கருதும் அவர், இதனால் பல முஸ்லீம் நாடுகள் பாதிப்புக்குஉள்ளாகலாம் என்று கூறியுள்ளார்.
பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் ஏற்கனவே கலவரங்கள் வெடித்துள்ளன. ஆப்கானிஸ்தானில்அமெரிக்காவின் தாக்குதல் தொடர்ந்தால், இந்நாடுகளில் உள்நாட்டுப் போர் மூளும் அபாயமும் உள்ளது என்றும்சுதைரி கூறியுள்ளார்.
உள்நாட்டுப் போரினால் ஏற்படும் விளைவுகள் மிகவும் கடுமையாக இருக்கும் என்றும் அவர் எச்சரிக்கைவிடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications