தமிழகத்திற்கு விரைவில் ஆளுநரை நியமிக்க பன்னீர் கோரிக்கை
சென்னை:
தமிழகத்திற்கு புதிய ஆளுநரை விரைவில் நியமிக்க வேண்டும் என்று கோரி பிரதமர் வாஜ்பாய்க்கு தமிழக முதல்வர்ஓ. பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி, மத்திய அமைச்சர்கள் முரசொலி மாறன், டி.ஆர். பாலு ஆகியோர் கைதுசெய்யப்பட்ட போது, அரசியல் சட்டபட்டி செயலாற்றவில்லை என்றும் தனது கடமையை சரிவர செய்யவில்லைஎன்றும் கூறி அப்போதைய தமிழக ஆளுநர் பாத்திமா பீவி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதையடுத்து ஆந்திர ஆளுநரான டாக்டர் சி. ரங்கராஜன், தமிழக ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்என்று மத்திய அரசு அறிவித்தது.
ரங்கராஜன் தமிழக ஆளுநராக கடந்த ஜுலை மாதம் பதவியேற்றுக் கொண்டார்.
இந்நிலையில் தமிழத்திற்கு புதிய ஆளுநரை விரைவில் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பிரதமர்வாஜ்பாய்க்கு சில தினங்களுக்கு முன்பு பன்னீர்செல்வம் கடிதம் எழுதியிருந்தார்.
பன்னீர்செல்லவத்தின் கோரிக்கையையடுத்து தமிழகத்திற்கு விரைவில் புதிய ஆளுநர் நியமிக்கப்படலாம் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications