சென்னையில் ரூ.1.5 கோடி ஹெராயின் பறிமுதல்
சென்னை:
சென்னை நகர போலீஸார் ரூ.1.5 கோடி மதிப்புள்ள 11.5 கிலோ ஹெராயின் போதைப் பொருளை பறிமுதல்செய்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் முத்துக்கருப்பன் கூறுகையில்,
சென்னை வால்டாக்ஸ் சாலையில் போதைப் பொருள் கடத்தல் சகஜமாக நடப்பதாக போலீஸாருக்குத் தகவல்வந்தது. இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் வால்டாக்ஸ் சாலையில்கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு மோட்டார் சைக்கிளை வழிமறித்து சோதனையிட்டபோது, அதில் 11.5 கிலோ எடையுள்ளஹெராயின் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.
சர்வதேச சந்தையில் அதன் மதிப்பு ரூ.1.5 கோடியாகும். இந்தக் கடத்தல் சம்பந்தமாக 2 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல, டி.பி. சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை கொடி கட்டிப் பறப்பதாக செய்தி வந்தது. இதையடுத்துகஞ்சாத் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த போலீஸார் அங்கு விரைந்து சென்று ஆறுமுகம் என்பவரைக் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 500 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்தனர் என்றார் முத்துக்கருப்பன்.












Click it and Unblock the Notifications