சென்னையில் கல்லூரி மாணவர்கள் திடீர் ரகளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் திடீரென செய்த ரகளையால் பஸ்சின் கண்ணாடிகள் உடைத்துநொறுக்கப்பட்டன. பஸ் டிரைவரும் தாக்கப்பட்டார்.

சென்னை அண்ணா சதுக்கம் அருகே கல்லூரி மாணவர்கள் திடீரென ரகளையில் ஈடுபட்டனர். அந்த வழியாகச்சென்று கொண்டிருந்த பஸ்களின் மீது கல்லை எறிந்து கண்ணாடிகளை உடைத்தனர்.

இச்சம்பவத்தில் 25ஜி என்ற பஸ்ஸின் கண்ணாடி உடைக்கப்பட்டது. அந்த பஸ்சின் டிரைவரும் கடுமையாகத்தாக்கப்பட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:

அண்ணா சதுக்கம் அருகே 3 மாணவர்கள் திடீரென்று பஸ்சில் ஏறினர். பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரையும்அவர்கள் இறக்கிவிட்டனர். அதே சமயம் வேறு சில மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்.

நாங்கள் என்ன நடக்கிறது என உணரும் முன்னரே பெரிய பெரிய கற்களை பஸ் மீது எறிய ஆரம்பித்தனர். தடுக்கமுயன்ற என்னையும் பயங்கரமாகத் தாக்கினர்.

சில மாணவர்கள் பொது மக்களையும் தாக்க முற்பட்டனர். அவர்கள் எதற்காக இப்படியெல்லாம் நடந்துகொண்டார்கள் என்று எனக்குப் புரியவில்லை என்றார் அந்த டிரைவர்.

வன்முறையில் ஈடுபட்ட மாணவர்கள் எந்த கல்லூரியை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவில்லை. இந்தச் சம்பவம்காரணமாக அந்த பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.

போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+