இந்திய மாணவர்களை வரவேற்கிறது இங்கிலாந்து
பெங்களூர்:
இந்தியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கல்வி கற்க வரும் மாணவர்களின் எண்ணிக்கையை 12,000 ஆக உயர்த்த அந்நாடு திட்டமிட்டுள்ளது.
அவரக் கூறுகையில், இங்கிலாந்தில் தற்போது 11,000 இந்தியர்கள் சாப்ட்வேர் பணியில் உள்ளனர். இதுஇங்கிலாந்துக்கு வெளி நாடுகளில் இருந்து வந்துள்ள சாப்ட்வேர் இன்ஜினியர்களில் பாதி அளவாகும்.
மேலும் தற்போது இந்தியாவிலிருந்து இங்கிலாந்து வந்து படிக்க 7,000 மாணவர்களுக்குஅனுமதியளிக்கப்படுகிறது. வரும் 2005ம் ஆண்டில், இது 12,000 மாக உயர்த்தப்படும். அங்கு வந்து பயிலும்மாணவர்கள் தங்கள் படிப்பை முடித்த பிறகு அங்கேயே வேலை தேடிக் கொள்ளவும் அனுமதிக்கப்படும்.
ஜெர்மன் தற்போது வழங்கியதைப் போல கிரீன் கார்டு வழங்குவதைப் பற்றி எனது மற்ற அமைச்சரவைச்சகாக்களுடன் பேசித் தான் முடிவு செய்ய முடியும். விரைவில் அதுபற்றி முடிவெடுப்போம்.
மேலும் இங்கிலாந்தில் முதலீடு செய்ய வரும் இந்திய நிறுவனங்கள் வரவேற்கப்படுகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications