பாக். எல்லைப் பாதுகாப்புக்கு அமெரிக்கா நிதியுதவி
வாஷிங்டன்:
ஆப்கானிஸ்தான் அருகே உள்ள எல்லையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக பாகிஸ்தானுக்கு 73 மில்லியன்டாலர்களை அமெரிக்கா வழங்கவிருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை எதிர்த்து அமெரிக்கா நடத்திவரும் போருக்கு, பாகிஸ்தான் ஒத்துழைப்புஅளித்து வருகிறது. இதற்காக ஆப்கானிஸ்தான் அருகே உள்ள எல்லையைப் பாதுகாத்துக் கொள்வதற்காகபாகிஸ்தானுக்கு 73 மில்லியன் டாலர்களை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
இந்த உதவியில் ஹெலிகாப்டர்கள், விமானங்கள், தரைவழி வாகனங்கள், தொலைதொடர்பு சாதனங்கள், இரவில்பயன்படுத்தப்படும் கண்ணாடிகள், மற்றும் அதற்கான பயிற்சிகள் ஆகியவை அடங்கும் என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆப்கானில் இருந்து தலிபான்கள், மற்றும் அமெரிக்க எதிர்ப்புப் படையினர் எல்லையைக் கடந்துபாகிஸ்தானுக்குள் நுழைவதாகப் புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதர் விண்டிசெம்பர்லின் கூறுகையில்,
இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தடுக்கப்படும் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறியுள்ளார். உண்மையில்அவர் அதற்காகப் பாடுபடுகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும்இடையில் உள்ள எல்லை பெரியதாக இருப்பதால் அதை கட்டுக்குள் கொண்டுவருவது சற்று சிரமமான காரியம்தான்.
பாகிஸ்தானில் உள்ள முஸ்லீம் மதவாதக் குழுக்களின் கிளர்ச்சிகளை அடக்காமல், ஆப்கானிஸ்தானில்தீவிரவாதிகளை வெல்ல முடியாது என்பதை முஷாரப் நன்றாக உணர்ந்துள்ளார்.
இதுபோன்ற மதவாதக் குழுக்களை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கதற்போது அமெரிக்காவில் இருந்து ஒரு குழு வருகிறது.
முஷாரப்பைப் பொறுத்தவரை பாகிஸ்தானை, தீவிரவாதத்தாலும், வன்முறைகளாலும் பாதிக்கப்பட்ட நாடாகத்தான்பார்க்கிறார். அதைச் சரிசெய்ய வேண்டும் என்பதில் அவர் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருகிறார் என்றார்செம்பர்லின்.












Click it and Unblock the Notifications