லைசென்ஸ் இருந்தால் டிரைவர் வேலை
சென்னை:
போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்துவருதையடுத்து, மாற்று ஏற்பாடாக டிரைவர் லைசென்ஸ்வைத்திருப்பவர்களை தேர்ந்தெடுத்து பஸ்களை இயக்க அரசு முடிவுசெய்துள்ளது.
தமிழகம் முழுவதும் போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து வருகிறார்கள். இதனால்சென்னையில் கூட்ட நெரிசல் அதிகமாகியுள்ளது. பொதுமக்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்லமுடியாமல் காத்துக் கிடக்கின்றனர்.
இதை சமாளிக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் பல மாற்று ஏறபாடுகளை செய்து வருகிறது. அதன்படிசென்னையில் டிரைவிங் மற்றும் கண்டக்டர் லைசென்ஸ் வைத்திருக்கும் அனைவரும் நேர்முகத் தேர்வுக்குஅழைக்கப்பட்டிருக்கிறார்கள்.
இவர்கள் குறைந்தபட்சம் 10ம் வகுப்பு தேர்வு பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன டிரைவர் லைசென்ஸ்வைத்திருக்க வேண்டும். மேலும் 35 வயதுக்குட்பட்டவக்ளாகவும், 160 செ.மீக்கு குறையாமல்உயரமுடையர்வகளாகவும் இருக்க வேண்டும்.
இந்த அறிவிப்பு குறித்து தகவல் அறிந்ததும், நூற்றுக்கணக்கான இளைஞர்கள் சென்னை மாநகர் போக்குவரத்துக்கழக அலுவலகத்தில் குவிந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications