அமெரிக்கா மீது தாக்குதல்: நான்தான் காரணம் - பின் லேடன்

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு தான்தான் காரணம் என்று சர்வதேசதீவிரவாதி ஒசாமா பின் லேடன் ஒப்புக் கொண்டுள்ளார்.

தன்னுடைய அல்-கொய்தா ஆதரவாளர்களுக்கு வீடியோ மூலம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் பின் லேடன்இவ்வாறு கூறியுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:

நம் மக்களைக் கொன்றவர்களைப் பழி வாங்குவதற்காகவே அவர்கள் நாட்டைச் சேர்ந்த மக்களைக் கொன்றோம்.நாங்கள் செய்தது சரியே.

இரண்டு வகை பயங்கரவாதங்கள் உண்டு. ஒன்று, நல்ல பயங்கரவாதம். மற்றொன்று கெட்ட பங்கரவாதம். நாங்கள்செய்து வருவது நல்ல பயங்கரவாதம். அவர்களைக் கொல்வதை நாங்கள் நிறுத்த மாட்டோம்.

அமெரிக்க கட்டடங்களில் விமானங்களை மோதிய பைலட்டுகளுக்கு அல்லா ஆசி வழங்குவார்.

நியூயார்க்கின் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் தகர்க்கப்பட்டபோது இறந்தவர்கள் சிவிலியன்கள் அல்ல.அவர்கள் அனைவரும் அமெரிக்க பொருளாதாரத்தின் ஆதரவாளர்கள். பொருளாதாரத்தைத் தவறாகப்பயன்படுத்தியவர்கள்.

எங்களை எப்படி அவர்கள் நடத்தினார்களோ அப்படித்தான் நாங்களும் அவர்களை நடத்துகிறோம். இந்தப்போரில் மற்ற நாடுகள் அமைதியாக ஒதுங்கிக் கொள்வதுதான் நல்லது என்று அதில் கூறியிருந்தார் பின் லேடன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+