தலிபான்கள் பிடியிலிருந்து 8 கிறிஸ்தவ போதகர்கள் விடுதலை
வாஷிங்டன்:
கிறிஸ்தவ மதத்தைப் போதித்த குற்றத்திற்காக கடந்த ஆகஸ்ட் மாதம் தலிபான்களால் கைது செய்யப்பட்ட 8 பேர்விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தற்போது திடீரென அந்த 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவர்கைள் அனைவரும்தற்போது பாகிஸ்தானுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று லிபிய அதிபர் மோமர் கடாமியின் மகன் செய்ப்-இல்-இஸ்லாம்கடாபி முன்பு கேட்டுக் கொண்டதற்கிணங்க தற்போது அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்றுகூறப்படுகிறது.
இவர்களின் விடுதலை குறித்து செய்ப்-இல்-இஸ்லாம் கடாபி கடந்த சில நாட்களுக்கு முன்பு நிருபர்களிடம்கூறுகையில்,
கடாபி பவுண்டேஷன் என்ற எங்கள் தன்னார்வ நிறுவனத்தின் மூலம் நான் கடந்த 2 மாதங்களாக தலிபான்ஆட்சியாளர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். அப்போது அவர்களிடம் கைது செய்யப்பட்டிருந்த 8 கிறிஸ்தவமத போதகர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்திவந்தேன். அவர்கள் விரைவில் விடுதலைசெய்யப்படுவார்கள் என்று முன்பே கூறியிருந்தார்.
அதன்படி தற்போது அவர்கள் 8 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச அமைதிக்குழு:
ஆப்கானில் அமைதியை நிலைநாட்டு பல நாட்டு படைகள் அடங்கிய கூட்டுப் படையை, குறிப்பாக துருக்கி,பங்களாதேஷ், இந்தோனேஷியா ஆகிய இஸ்லாமிய நாடுகளின் படைகளை, அனுப்ப ஐக்கிய நாடுகள் சபிையில்அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. இந்தக் கூட்டுப் படையில் தங்கள் நாட்டு வீரர்களையும் சேர்க்க வேண்டும்என்று சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் கோரியுள்ளன.
இதுகுறித்து இரு நாட்டுத் தலைவர்களும் ஐ.நா.சபைத் தலைவர் கோபி அன்னானுடனும், அமெரிக்கஅதிகாரிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
முக்கியமாக ஆப்கானில் நார்தர்ன் அலையன்ஸ் படையினர் கைப்பற்றியுள்ள பகுதிகளில் தங்கள் படைகளைநிறுத்த அனுமதிக்க வேண்டும் என இந்த 2 நாடுகளும் கோருகின்றன.
ஆனால், இந்த இரு நாடுகளும் தான் தலிபான்களுக்கு ஆதரவு கொடுத்து ஆப்கானிஸ்தானையே நாசப்படுத்தினஎன்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications