பின் லேடன் பாகிஸ்தானுக்குள் நுழைய முயற்சி?
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானுக்குள் சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் புகுந்துவிடும் அபாயம் இருப்பதால், அந்நாட்டுஎல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சர்வதேச தீவிரவாதி பின்லேடன் பாகிஸ்தானுக்குள் புகுந்து மறைந்து கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகசெய்திகள் வெளியானதையடுத்து, அந்நாட்டு எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில்,
பாகிஸ்தான் அரசு தற்போது தீவிரவாதிகளுக்கு உள்ள எல்லாவிதமான வாய்ப்புகளுக்கும் முக்கியத்துவம்கொடுத்து, அவற்றைத் தவிர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறது.
பின்லேடன் பாகிஸ்தானுக்குள் நுழையும் ஆபத்து இருப்பதாகக் கருதி, எல்லையில் பாதுகாப்பைபலப்படுத்தியுள்ளோம் என்றார்.
பின்லேடனை ஒப்படைக்க மாட்டோம்: தலிபான்கள்
எந்த சூழ்நிலையிலும் அமெரிக்காவிடம் பின்லேடனை ஒப்படைக்க மாட்டோம் என்று தலிபான் செய்தித்தொடர்பாளர் முல்லா அப்துல்லா கூறியுள்ளார்.
பின்லேடனும், முல்லா முகம்மது ஒமரும் நல்ல ஆரோக்கியத்துடன் ஆப்கானிஸ்தானுக்குள் தான் இருக்கிறார்கள்.பின்லேடன் எங்கள் விருந்தாளி. அவரை ஒப்படைக்க வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் அவர்கூறினார்.












Click it and Unblock the Notifications